×

பேரூர் திமுக சார்பில் திருவேங்கடத்தில் நீர்மோர் பந்தல்

திருவேங்கடம், மே 1: திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் கோடைகாலத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நீர்மோர் பந்தல் அமைத்து மக்களுக்கு நொங்கு, பதநீர், சர்பத், பானக்காரம், குளிர்பானம், பழவகைகள் வழங்கி கோடை வெம்மையில் இருந்து பொதுமக்களை காக்க உதவுமாறு உத்தரவிட்டார். அவரது ஆணைக்கிணங்க திருவேங்கடம் பேரூர் திமுக சார்பில் திருவேங்கடம் மெயின் பஜாரில் காந்தி மண்டபம் முன்பாக அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலின் திறப்பு விழா ஒன்றியச் செயலாளர் சேரமத்துரை தலைமையில் நடந்தது. திருவேங்கடம் பேரூர் செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளரான ராஜா எம்எல்ஏ, நீர்மோர் பந்தலைத் திறந்துவைத்தார்.

தொடர்ந்து அவர் பொதுமக்களுக்கு நீர், மோர், தர்ப்பூசணி, நொங்கு, பதநீர், சர்பத், பானாகாரம், இளநீர் போன்ற உடலுக்கு குளிர்ச்சி விளைவிக்க கூடிய பொருட்களை வழங்கினார். விழாவில் மாவட்ட அவைத்தலைவர் பத்மநாதன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜதுரை, ஒன்றியச் செயலாளர்கள் கடற்கரை, பெரியதுரை, டிடி ராமச்சந்திரன், சார்பு அணிகளின் மாவட்ட நிர்வாகி கலைச்செல்வன், முத்துகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் அய்யலுசாமி, முத்தையா, பேரூராட்சி கவுன்சிலர்கள் முத்துமாரி கனகராஜ், கணேசன், மகேஸ்வரி மகேஸ்வரன், கிருஷ்ணசாமி, கிளைக் கழகச் செயலாளர்கள் பாண்டி, மணிமாறன், குணசேகரன், கோபி, அய்யனார், பிரபு, மாடசாமி, செல்வகுமார், மாரிமுத்து, மன்னார் குருசாமி மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள், ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகள், டாக்ஸி ஓட்டுனர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை திருவேங்கடம் பேரூர் திமுக செயலாளர் மாரிமுத்து செய்திருந்தார்.

The post பேரூர் திமுக சார்பில் திருவேங்கடத்தில் நீர்மோர் பந்தல் appeared first on Dinakaran.

Tags : Nemor Pandal ,Thiruvenkadam ,Perur DMK ,DMK ,Tamil Nadu ,Chief Minister ,M.K. ,Stalin ,Neemor Pandal ,
× RELATED மின்சாரம் தாக்கி தொழிலாளி காயம்